இந்த நபர் இலங்கையை சேர்ந்த 29 வயதானவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான கையடக்க தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முயன்ற குடியேற்றவாசிகளை லித்துவேனிய பாதுகாப்பு படையினர் பல முறை தடுத்துள்ளனர். அவ்வாறு முயற்சித்த குழுவில் இந்த நபர் இருந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலோட்ஸ்க் எல்லைக்குழுவின் உத்தியோகபூர்வ பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த குழுவினரும், புலனாய்வாளர்களுக்கும் உள்ளூர்வாசிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர். எவ்வாறாயினும் இலங்கை நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். |