புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2021

பெலாரஸ் எல்லையில் இலங்கையரின் சடலம்!

www.pungudutivuswiss.com

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில்  கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் 29 வயதான இலங்கையர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை நபரின் உடல் வித்துவேனியாவின் எல்லையில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள புதர்களுக்கு மத்தியில் கடந்த 5 ஆம் திகதி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது

இந்த நபர் இலங்கையை சேர்ந்த 29 வயதானவர் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான கையடக்க தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் ஆவணங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

பெலாரஸில் இருந்து சட்டவிரோதமாக செல்ல முயன்ற குடியேற்றவாசிகளை லித்துவேனிய பாதுகாப்பு படையினர் பல முறை தடுத்துள்ளனர். அவ்வாறு முயற்சித்த குழுவில் இந்த நபர் இருந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலோட்ஸ்க் எல்லைக்குழுவின் உத்தியோகபூர்வ பிரதிநிதி தெரிவித்துள்ளார். இந்த குழுவினரும், புலனாய்வாளர்களுக்கும் உள்ளூர்வாசிகளிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கை நபரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய தடயவியல் பரிசோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

   
   Bookmark and Share Seithy.com

ad

ad