புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2023

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 2 வயதுக் குழந்தை பலி! [Saturday 2023-08-26 16:00]

www.pungudutivuswiss.com


வவுனியா - நெளுக்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.  நேற்று மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

வவுனியா - நெளுக்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. நேற்று மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் தேடியுள்ளனர். இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த தண்ணீர் தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது

உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராஜா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது. சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ad

ad