அனைத்துலக விசாரணை உள்ளடக்கப்படுமா? அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானம் வரையும் 4 நாடுகள்
சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச் சபைத் தீர்மானத்தில் அனைத்துலக விசாரணைக்கான பொறிமுறை உள்ளடக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை பரவலாக வலுத்துவரும் நிலையில், அமெரிக்காவுடன் கூட்டாக நான்கு நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தினை வரையத் தொடங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.