புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2019

கிளிநொச்சியில் கர்ப்பிணிபெண் உட்பட ஒன்பது பேருக்கு வாள்வெட்டு! பொலிஸார் இராணுவத்தினர் குவிப்பு!

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று (29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது ஒரு கர்ப்பிணி பெண் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் காயமடைந்துள்ளனர்.சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த அனைவரும் தனியார் மற்றும் மூன்று நோயாளர் காவு வண்டிகளில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள் இரத்தத்தால் தோய்ந்து காணப்படுகின்றன.

பட்டா ரக வாகனம் மற்றும் உந்துருளியில் சென்ற 15 க்கு மேற்பட்ட வாள்வெட்டுதாரிகள் வீடுகளுக்குள் புகுந்து வாள் வெட்டில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவத்தில்உந்துருளி ஒன்று எரிக்கப்பட்டுள்ளதுடன், மற்றொரு உந்துருளி அடித்து சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. அத்துடன் தற்காலிக வீடொன்றும் எரிக்கப்பட்டுள்ளது. இரண்டு வீடுகளின் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதலில் பாதிக்கபட்ட ஒரு குடும்பம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று (செவ்வாய் ) தங்களுக்கு குறித்த சிலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முறைப்பாடு செய்ததாகவும் ஆனால் பொலிஸார் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

ad

ad