இதனிடையே யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு அடுத்த மாதம் ரணில் மற்றும் மைத்திரி,அமைச்சர்கள் என பலரும் படையெடுக்கவுள்ளனர்.
சமூர்த்தி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரணில் முதலில் யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் யாழ்.மாநகர சபை வளாகம் மற்றும் மணியம் தோட்டப் பகுதி உள்ளிட்ட யாழ்.நகரப் பகுதிகளில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், இலங்கைப்பிரதமர் விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளிலுள்ள குடும்பங்களின் விபரங்களையும் பொலிஸார் சேகரித்து வருகின்றனர்