கிரிக்கெட்: 2015 உலகக் கோப்பையில் 14 நாடுகள்
புதுதில்லி, ஜூன்.28: 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 14 நாடுகள் இடம்பெற உள்ளன. 10 அணி வடிவத்தில் இருந்து 14 அணி வடிவமாக மாற்றப்பட்ட உள்ளது. உலகக் கோப்பையில் தாங்கள் பங்குபெற முடியவில்லையே என்று உறுப்பு நாடுகள் எண்ணுவதற்கு இடமில்லாத வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.
ஹாங்காங்கில் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டுக் கூட்டத்தின் 3-வது நாளான இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக