புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2012


சுன்னாகத்தில் குடிநீர்க் கிணறுகளில் எண்ணெய்க் கசிவுகள்!-ஆய்வின் மூலம் வெளியான அதிர்ச்சித் தகவல்
யாழ்.சுன்னாகத்திலுள்ள பொது மக்களது பல குடிநீர்க் கிணறுகளில் உள்ள நீரில் எண்ணைக்கசிவுகள் கலந்துள்ளது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
சுன்னாகத்திலுள்ள இலங்கை மின்சார சபையின் மின் உற்பத்தி நிலையம்; மூலமே இக்கசிவு ஏற்பட்டுள்ளதாகத் ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களின் குடிநீர்க் கிணறுகளில் எண்ணைக்கழிவுகள் கலந்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் இதற்கான ஆய்வுகளை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை மேற்கொண்டது. இவ்ஆய்வின் போது காணியொன்றின் கழிவு எண்ணை பாரிய அளவில் தேங்கி நின்றதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின் உற்த்தி நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எண்ணையினாலேயே இக்கசிவு ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டள்ளது
மேலும் இது தொடர்பில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை வலி.தெற்கு பிரதேச சபையின் கோரிக்கையில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மேற்கொண்டு வருகின்றது.

ad

ad