புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2012


கள்ளக்காதலனுடன் படுக்கையில் இருந்ததை நேரில் பார்த்ததால் தீர்த்து கட்டினோம்: கைதான அண்ணி போலீசில் வாக்குமூலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள கொத்தூரை சேர்ந்தவர் திம்மராயப்பா. இவருக்கு 3 மகள்களும், சங்கர், சதீஷ் (8) என்ற 2 மகன்களும் உள்ளனர். இதில் சதீஷ்தான் கடைசி மகன். இவன் இந்த ஊரில் உள்ள பள்ளியில்

2-ம் வகுப்பு படித்து வந்தான். 

திம்மராயப்பாவின் மூத்த மகன் சங்கருக்கும், கலா என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வருகிறார்கள். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் சிறுவன் சதீஷ் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டைக்குள் பிணமாக வீசப்பட்டு கிடந்தான். 

இதையடுத்து உத்தனப்பள்ளி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். மேலும் துப்பறியும் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. துப்பற்றியும் மோப்ப நாய் திம்மராயப்பாவின் வீட்டிற்குள் சென்றது. பின்னர் சமையல் அறைக்கு சென்ற நாய் அங்கு நின்று கொண்டது. 

இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வீட்டில் உள்ளவர்களிடம் தனிதனியாக விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் சதீஷின் அண்ணி கலா முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் அவர் மீது போலீசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முதலில் பேச மறுத்த அவர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சதீசை நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார். 

இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து போலீசார் கொலைக்கு வேறு யாராவது உதவினார்களா? என்ன காரணத்திற்காக கொலை செய்தாய்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். அதற்கு அவள் அழுது கொண்டே இருந்தாள். பின்னர் கலாவை போலீசார் கைது செய்தனர். 

மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர் வாக்குமூலமாக கூறியதாவது:- 

நானும், சங்கரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்நிலையில் எனக்கும் இதே ஊரை சேர்ந்த புட்டப்பா (38) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. என்னை விட 16 வயது அதிகமாக இருந்தாலும் அவர் மீது எனக்கு மோகம் ஏற்பட்டது. இதனால் என் கணவர் சங்கர் வேலைக்கு சென்ற நேரம் பார்த்து புட்டப்பா எங்கள் வீட்டிற்கு வருவார். பின்னர் நாங்கள் 2 பேரும் உல்லாசமாக இருப்போம். இது தினமும் நடந்து வந்தது. 

இந்நிலையில் கடந்த 1-ந் தேதி மாலையும் வீட்டில் யாரும் இல்லை. இதையடுத்து நான் போன் செய்து புட்டப்பாவை வரவழைத்தேன். அப்போதும் நாங்கள் வழக்கம் போல் எங்களை மறந்து உல்லாசத்தில் திளைத்து கொண்டு இருந்தோம். ஆடைகள் களைந்த நிலையில் படுக்கையில் இருந்தோம். அப்போது எங்களது முனங்கல் சத்தம் கேட்டு என் கணவரின் தம்பி சதீஷ் வீட்டிற்குள் ஓடிவந்தான். 

அப்போது திடீரென படுக்கையறைக்குள் ஓடிவந்தான். அங்கு நானும், புட்டப்பாவும் கட்டித்தழுவி கொண்டு இருந்ததை அவன் நேரில் பார்த்தான். இதைக்கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். எங்கே வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிடுவானோ? கூறினால் நம் மானமே போய் விடுமே என்றும் என்ன செய்வது என்றும் தெரியாமல் குழப்பம் அடைந்தேன். 

இதையடுத்து நானும், புட்டப்பாவும் படுக்கை அறையில் இருந்து வெளியே வந்து யோசித்து கொண்டு இருந்தோம். அப்போது தான் நான் அவனை தீர்த்து கட்டி விட முடிவு செய்தேன். அதன்படி வீட்டிற்கு வெளியே சென்ற சதீசை அழைத்தேன். அவன் வீட்டிற்கு வந்தான். அப்போது நான் அவனது வாயை பொத்திக் கொண்டேன். புட்டப்பா கை, கால்களை பிடித்துக் கொண்டார். பின்னர் சதீசை சமையல் அறைக்கு தூக்கி சென்றோம். அங்கு திமிறிக் கொண்டே இருந்தான். 

அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து சதீஷின் பின்பக்க தலையில் புட்டப்பா ஓங்கி வெட்டினார். தொடர்ந்து கழுத்தையும் நெரித்தோம். ஆனாலும் உயிர் போக வில்லை. 

இதையடுத்து புட்டப்பா மீண்டும் வெட்ட முயன்றார். அப்போது அவன் தடுத்தான். இதில் அவனது கையிலும் வெட்டு விழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் துடிதுடித்து சதீஷ் இறந்து விட்டான். பின்னர் வீட்டில் இருந்த உர சாக்குமூட்டையை கொண்டு வந்து அதில் சதீசின் உடலை திணித்தோம். இரவு நேரம் ஆனதும் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய தோட்டத்தில் கொண்டு சென்று வீசி விட்டோம். 

தொடர்ந்து சமையல் அறைக்கு வந்த நான் அங்கு படிந்திருந்த ரத்தக்கறைகளை அகற்றினேன். இரவு நேரம் ஆகிவிட்டதால் சதீசை எனது மாமனார், கணவர் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் தேட ஆரம்பித்து விட்டனர். நானும் அவர்களுடன் சேர்ந்து தேட ஆரம்பித்தேன். அப்போது ரத்தம் வடிந்த நிலையில் சதீஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அவர்கள் ஓடினர். நானும் சந்தேகம் வராத வகையில் அவர்களுடன் சென்று பிணத்தை பார்த்து கதறி அழுதேன். போலீசார் மோப்ப நாய் கொண்டு வந்து சோதனை நடத்திய போது அது சமையல் அறைக்கு ஓடி வந்து நின்றது. இதையடுத்து போலீசார் என்னை அழைத்த போது நான் நடந்த விபரங்களை கூறிவிட்டேன். 

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் இந்த கொலையில் தொடர்பு உடைய புட்டப்பாவை போலீசார் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. செக்ஸ் சுகத்துக்காக சிறுவனை அண்ணியே கொலை செய்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad