புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013



ராகிங்கால் கல்லூரி மாணவி தற்கொலை!கோவையில் பரபரப்பு!
கோவை கொங்குநாடு ஆட்ஸ் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் ரேவதி சுபாஷினி. இவருக்கு வயது 17. இவர் கடந்த 25 நாட்களாக புதிய டூவீலரில் கல்லூரிக்கு போய் வருவது வழக்கம். அப்படி
போய் வரும்போது, கல்லூரி மாணவர்கள் சிலர் தொடர்ந்து அந்த மாணவியை கிண்டல் செய்து, ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இதுபோன்று மாணவர்கள் தன்னை ராக்கிங் செய்து கொண்டிருப்பதால், 23.01.2013 அன்று மாலை வீட்டுக்கு வந்த மாணவி, அப்பாவான ஜெயராஜிடமும், அம்மாவான கீதாவிடமும் மாணவர்களின் ராக்கிங் பற்றி கூறியும், இனி கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 
அங்குள்ள மாணவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. வேறு கல்லூரியில் சேர்த்துவிடுங்கள் என்று பெற்றோரிடம் கண்ணீர் விட்டுள்ளார். பின்னர் பெற்றோர்கள் மகளை சமாதானம் செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று (24.01.2013) காலை 10.30 மணி அளவில் வீட்டிலேயே இருந்த மாணவி, தனது அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த பெற்றோர்கள் கதறினர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குடியலூர் காவல்நிலைய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad