புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2013

book 06

அத்தருணத்தில் பகைவீழ்த்தி’ நூல் சென்னையில் வெளியீடு (படங்கள்)

 
இலங்கைப் போரை மையப்படுத்தி கிளிநொச்சியைச் சேர்ந்த அகர முதல்வன் என்பவர் எழுதிய “அத்தருணத்தில் பகை வீழ்த்தி” நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள திரை இசை கலைஞர்கள் சங்க அரங்கில் நடைபெற்ற நிகழ்விற்கு மூத்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமை தாங்கினார் வரவேற்புரையினை ஈழத்தைச் சேர்ந்த ஏழாலையூர் வரன் நிகழ்த்த சென்னையைச் சேர்ந்த பாமரன் “அத்தருணத்தில் பகைவீழ்த்தி” என்ற நுலினை வெளியீடு செய்ய செயப்பிரகாசம் பெற்றுக்கொண்டார்.
இந்த நூலுக்கான கருத்துரைகளை ஓவியர் புகழேந்தி, ஈழத்தைச் சேர்ந்தவர்களான தீபச்செல்வன், ஈழவாணி, சோமிதரன், அன்பரசி ராஜ்குமார் ஆகியோர் நிகழ்த்த ஏற்புரையினை நூலின் ஆசிரியர் அகரமுதல்வன் நிகழ்தினார். கோகுலன் நடராஜனின் நன்றியுரையுடன் நூல் வெளியீட்டு நிகழ்வு நிறைவு பெற்றுள்ளது.
book 02book 01book 03book 04book 05

Comments

ad

ad