புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜூலை, 2013

லண்டனில் விமானத்தின் கதவை திறக்க முயன்றவர் அமைச்சர் கெஹலியவின் மகனே!- ஸ்ரீலங்கா கிரிக்கெட


ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெலவே லண்டனில் பயணித்த விமானத்தின் கதவை திறக்க முயற்சித்தார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் சைபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானத்தில் சென் லூசியாவிலிருந்து கெட்விக் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோதே மது போதையில் இருந்த ரமித் ரம்புக்வெல விமானத்தின் கதவை திறக்க முயன்றுள்ளார.
இதனால் பயணிகள் பதற்றமடைந்தனர்.
இந்த அசம்பாவிதத்தையடுத்து பயணிகளிடமும் அங்கிருந்த அதிகாரிகளிடமும் ரமித் ரம்புக்வெல மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும் தவறுதலாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
முன்னர் வந்த செய்தி

ad

ad