புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜன., 2014

வீரபாண்டி ராஜா கடிதம்! சேலம் தி.மு.க வில் திடீர் பரபரப்பு!
 

       மறைந்த வீரபாண்டியார் உருவச்சிலை வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி அன்று சேலம் மாவட்ட தி.மு.க அலுவலகம் முன் மு.க ஸ்டாலினால் திறக்கப்பட உள்ளது.  இதையொட்டி வீரபாண்டியாரின் மகன் வீரபாண்டி ராஜா தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) 



அதில், ‘கழகம் எனும் ஒரே குடும்பத்தை சார்ந்த நமக்குள் நிலவிடும் ஒற்றுமையையும் உறவுகளையும் சீர்குலைத்திடும் வகையில் ‘வீரபாண்டியார் மறைந்துவிட்டார் இனி சேலத்தை பொறுத்தவரை நாங்கள் தான்.’... இனி அரசியலுக்கு வரமாட்டார்.........என விசமப்பிரச்சாரம் செய்துவந்தனர்  என்று நீளும் கடிதத்தில் இறுதியாக ‘நமது ஆருயிர் தலைவர் வீரபாண்டியார் கனவுகளை லட்சியங்களை வென்றெடுத்திடலாம்.   சேலத்து சிற்பி தலைவர் வீரபாண்டியார் திருவுருவச்சிலை திறப்புவிழாவில் திரளாக கலந்துகொள் ளுங்கள்’என அழைப்பு விடுத்துள்ளார்.

சேலம் தி.மு.க பல அணியாக பிரிந்துள்ள நிலையில் இந்த கடிதம் சேலம் உடன் பிறப்புகள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

ad

ad