புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

பதாகைகள் ஏந்தி, சபையில் ஐ. தே. க. எதிர்ப்பு நடவடிக்கை

18 ஆம் திகதிக்கு பாராளுமன்றம் ஒத்திவைப்பு
மின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின் நிலையம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் கொண்டுவர இருந்த நிலையில் ஐ. தே.
க.வினர் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு நடவடிக் கைகளில் ஈடுபட்டதால் பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் தலைமையில் நேற்றுப் பிற்பகல் 1.30 மணிக்கு கூடியது.
வழக்கம் போன்று வாய் மூல வினாவுக்கான விடைகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சியின் பிரதம கொறடாவான ஐ. தே. க., எம்.பி. ஜோன் அமரதுங்க பால் மா விலை அதிகரிப்பு தொடர்பிலான விசேட கூற்று ஒன்றை முன்வைத்தார். அதன் பின்னர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஜோன் அமரதுங்க எம்.பியின் கூற்றுக்கு பதிலளித்தார்.
அதேபோன்று கடந்த புதன்கிழமை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் கொழும்பு துறைமுக அபிவிருத்தி தொடர்பாக முன்வைத்த விசேட கூற்றுக்கு சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்கவினால் மின்சாரம் மற்றும் நுரைச்சோலை அனல் மின்நிலையம் உட்பட ஏழு முக்கிய விடயங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவர இருந்தது.
சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைக்குமாறு சபைக்கு தலைமை வகித்துக்கொண்டிருந்த பிரதிச் சபாநாயகர் சந்திம வீரக்கொடி அறிவித்தார்.
பிரேரணையை கொண்டுவர இருந்த ரவி கருணாநாயக்க உட்பட எதிர்க் கட்சியின் எம்.பிக்கள் சபையில் வீற்றிருந்தனர்.
பிரதி சபாநாயகரின் அறிவிப்பை அடுத்து ரவி கருணாநாயக்க ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைப்பதற்கு பதிலாக பால் மா அதிகரிப்பு தொடர்பிலான எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பதாகைகளை கையில் ஏந்திய வண்ணம் எதிர்க் கட்சியினர் சகலரும் எழுந்து நின்றதுடன் சிலர் சபைக்கு நடுவில்வர முற்பட்டனர். இதனையடுத்து பாராளுமன்றத்தை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி பிற்பகல் 2.55 அறிவித்ததை அடுத்து சபை ஒத்திவைக் கப்பட்டது.
பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட போதிலும் பதாகைகளுடன் சபையின் நடுவிற்கு வந்த ஐ. தே. க. எம்.பிக்கள் சபாநாயகர் ஆசனத்திற்கு அருகில் சென்று பதாகைகளை ஒட்டி எதிர்ப்பை தெரிவித்தனர்.
பின்னர் சிறிது நேரத்தில் சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர்.

ad

ad