புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2014

இன்டர்நெட்டில் என் பெயரில் மோசடி: சிம்பு அறிக்கை
நடிகர்கள், நடிகைகள் பெயரில் டுவிட்டர், பேஸ்புக்கில் போலி அக்கவுண்ட்களை மர்ம நபர்கள் தொடங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பற்றிய செய்தி மற்றும் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்தும் உரையாடுகிறார்கள்


ஏற்கனவே திரிஷா பெயரில் போலி அக்கவுண்ட் துவங்கப்பட்டது. இதனை அவர் கண்டித்தார். சமீபத்தில் காமெடி நடிகர்கள் பரோட்டா சூரி, வி.டி.வி கணேஷ் பெயரிலும் மோசடி நடந்தது. தற்போது சிம்பு பெயரில் நடக்கிறது.
இதுகுறித்து சிம்பு வெளியிட்ட அறிக்கையில்,  ‘’நான் டுவிட்டரில் இருக்கிறேன். ஐ அம் எஸ்டிஆர் என்ற பெயரில் என் அதிகாரபூர்வ கணக்கு உள்ளது. ஆனால் என் பெயரில் சில போலி டுவிட்டர் அக்கவுண்ட்களும் இருக்கின்றன. ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் இந்த போலியை நம்பவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
என்னைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் எனது அதிகாரபூர்வ டுவிட்டர் அக்கவுண்டில் உடனுக்குடன் போட்டு வருகிறேன். என் பெயரில் உள்ள போலி அக்கவுண்ட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’என்று கூறியுள்ளார்.

ad

ad