புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மார்., 2014

கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான விசாரணை மேற்கொள்ளப்படும் - த.தே.கூ
கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் ஊடாகவே இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் 
உள்நாட்டு வானொலி ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் முன்வைக்கப்படும் பிரேரணை தமிழ் மக்களை முழுமையாக திருப்திப்படுத்துகிறது என்று சொல்லமுடியாது.

எனினும் கொழும்பில் உள்ள தூதரகத்தின் ஊடாக வெளிநாட்டு பிரதிநிதிகளை கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்படும்.

இந்த விடயத்தில் தமிழ் மக்கள் ஆறுதல் கொள்ள கூடியதாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

ad

ad