புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்
மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘’பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்பு 144- தடை உத்தரவை, தமிழக தேர்தல் ஆணையர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு காலத்தில், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்தனர்.


இதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 30-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பம் செய்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, என் மனுவை பரிசீலித்து, தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதி களுக்கும் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு  விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த மனு குறித்து பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு, மனுதாரர் நோட்டீசு அனுப்பவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.

ad

ad