புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014

அரியாலையில் மூதாட்டி கொள்ளையர்களால் கொலை 
அரியாலை இளையதம்பி வீதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க வந்தவர்களால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.


இன்று பகல் 11 மணியில் இருந்து 12 மணிக்கும் இடையில் வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த மூதாட்டியின் கழுத்தை துணியால் கட்டி அதனை வீட்டு யன்னலிலும் கட்டியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் சோமசுந்தரம் இராசம்மா ( வயது 72) என்ற மூதாட்டியே சாவடைந்துள்ளார். சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து இறந்தவரின் மகள் தெரிவிக்கையில்,
நான் மதியம் 12.10 மணியளவில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து பார்த்த போது அம்மாவைக் காணவில்லை. சமையலறைக்குச் சென்று பார்த்தேன். அங்கும் காணவில்லை வீட்டு அறையில் பார்க்கும் போது கழுத்தில் துணிகள் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததைக் கண்டேன்.

ஓடிப்போய் கூப்பிட்டு பார்த்தேன். தண்ணீர் தெளித்துப் பார்த்தேன். எழும்பவில்லை. உடனடியாக கூக்குரல் இட்டு அயலவர்களைக் கூப்பிட்டு அவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவந்தேன்.

குறித்த கொள்ளை சம்வத்தில் கோயிலுக்கு என சேமித்து வைக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபா பணம் உட்பட 5இலட்சத்திற்கும் மேற்பட்ட நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை பொலிஸார் மேற்

ad

ad