புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2014


மகளின் காதலனை வெட்டிக் கொன்ற  தந்தை கைது-இரு பகுதியினரும் மலையகதமிழரே 
காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டிக்கோயா தரவளை தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் செல்லையா செல்வரட்ணம் (வயது 18) என ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞன் காதலித்த பெண்ணின் தந்தையே ( மருதமுத்து பாலகிருஷ்ணன்- வயது 42) இந்தக் கொலை செய்திருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad