புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2014

உண்மையை கண்டறிய ஒத்துழைக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் மேற் கொள்ளப்படவிருக்கும் விசாரணைகள் மூலம், உண்மைகளைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும்.
ய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் துறைசார் நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. 
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், தமிழ் மக்களின் சார்பாகவும் இந்தக் கோரிக்கையை அரசிடம் முன்வைக்கின்றோம். இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
 
ஐக்கி
 
அதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, "உண்மையைக் கண்டறியும் செயன்முறையுடன் ஒத்துழைக்க வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். 
 
பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் இவ்வாறே கோரிக்கை விடுத்துள்ளன.
ஆயினும் ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க, ""ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இலஙகை ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்காது'' என்று தெரிவித்திருந்தார்.
 
இந்த விடயங்கள் தொடர்பில் இரா

.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடும் போது,
"கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக ஐ.நா. விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 
ஆனால் ஆரம்பம் முதலே இந்த் விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று இலங்கை அரசு பகிரங்கமாகத் தெரிவித்து வருகின்றது போர் நிறைவுக்கு வந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், உள்நாட்டில் நம்பகரமான சுதந்திரமான விசாரணையை இலங்கை அரசு நடத்தியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
 
ஐ.நா. குழுவின் விசாரணைக்கு ஒத்துழைக்கமாட்டோம் என்று  இலங்கை அரசு தற்போது சவால் விட முடியாது.அதிலிருந்து தப்பவும் முடியாது. ஐ.நா. கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.
வன்னியில் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம், மனிதாபிமான நடவடிக்கைகளிலேயே ஈடுபடுகின்றோம் என்று சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசு கூறிவந்தது. 
 
தற்போதும் அந்த வார்த்தையையே  இலங்கை அரசு தொடர்ந்து உச்சரித்து வருகின்றது. 
உண்மையில்  இலங்கை அரசு மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் ஐ.நா. குழுவின் விசாரணைக்கு முகம்கொடுக்கப் பின்னடிப்பது ஏன்?. இந்த விசாரணை குறித்து கவலை கொள்வதற்கு அவசியமே இல்லை. ஐ.நா. விசாரணை மூலம் உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் தமிழ் மக்கள் சார்பிலும் வேண்டிக்கொள்கின்றேன்'' என்று தெரிவித்தார்.

ad

ad