புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2014


பொள்ளாச்சியில் 2 மாணவிகள் பலாத்காரம்; பார்வையிட்ட சப் கலெக்டர் மயக்கம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 2 பள்ளி மாணவிகள் மர்ம நபர்களால் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் பாதிக்கப்பட்ட 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் சர்ச் அருகே இந்த விடுதி உள்ளது. பாழடைந்த மண்டபம்போல் காட்சியளிக்கும் இந்த விடுதியில் 17 மாணவர்கள், 3 மாணவிகள் உள்ளனர். இங்கு 2 நபர்கள் புதன்கிழமை நள்ளிரவில் நுழைந்தனர். 10 மற்றும் 11 வயது உள்ள 2 மாணவிகளை மிரட்டி கடத்தி சென்றனர். அருகில் உள்ள ஒரு கட்டடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. உடலில் ரத்த காயங்களுடன் அழுது கொண்டே 2 மாணவிகளும் விடுதிக்கு திரும்பினர். 

விவரம் தெரிந்ததும் விடுதி நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து 2 மாணவிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

சம்பவம் நடந்த விடுதியில் ஐ.ஜி., தேவஆசீர்வாதம், எஸ்.பி., சுதாகர் விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இதற்கிடையில் பெண் சப்.கலெக்டர் ரஷ்மி சித்தார்த் மாணவிகளை பார்த்து விசாரித்தார். மாணவிகளின் நிலையை பார்த்து அதிர்ந்து போனார். இதனால் அவர் சற்று மனம் தளர்ந்து மயக்கமுறும் நிலைக்கு சென்றார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர்.

இந்த தனியார் பள்ளி விடுதி ஒரு பாழடைந்த கட்டடத்தில் செயல்படுகிறது. இங்கு உரிய பாதுகாப்பு இல்லை. இது போன்ற சம்பவம் அடிக்கடி இங்கு நடந்து வருவதாக அக்கம் பக்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். சிலர் இங்கு வந்து போவதாக கூறப்படுகிறது. 

ad

ad