புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2014


காவல்நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: எஸ்.ஐ. கைது: 3 போலீசார் தலைமறைவு
உத்திரப்பிரசேத்தில் ஹமிப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமேப்பூர் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவரை காவல்துறையினரே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். 


ஹமிப்பூர் பகுதியில் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதையடுத்து கடந்த 9ஆம் தேதி இரவு சுமேப்பூர் காவல்நிலையத்தில் உள்ள தனது கணவரை பார்க்க சென்ற இளம்பெண்ணிடம், பாண்டே என்ற காவல்துறை ஆய்வாளர் ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர்காவல்நிலைய வளாகத்தில் உள்ள ஊழியர் குடியிருப்பு பகுதிக்குள் அப்பெண்ணை அழைத்துச் சென்ற மூன்று போலீஸ்காரர்கள், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக சுமேப்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். இதையடுத்து எஸ்.ஐ. பாண்டே கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று போலீஸ்காரர்கள் தப்பி சென்றதால், அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ரூபாய் 20 ஆயிரம் தர சொன்னபோது வங்கி இல்லாததால் காலையில் தருவதாக சொன்னேன். கேட்டுச் சொல்வதாக என்னை காத்திருக்க சொன்னார். 9 மணியில் இருந்து 11 மணி வரை அங்கேயே காத்திருந்தேன். 11 மணிக்கு கேட்டபோது எஸ்.ஐ. ராகுல் பாண்டே என்னை காத்திருக்க சொன்னார். 11 மணிக்கு காவல்நிலையத்தில் இருந்து எல்லோரும் போன பிறகு எஸ்.ஐ. பாண்டே என்னை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார் என்றார்.

ad

ad