புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


இலங்கையர்களின் பணங்களை சீசெல்ஸ் ஊடாக சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம்:
இலங்கையர்களின் பணங்களை சுவிஸ் வங்கிகளுக்கு பரிமாற்றம் செய்வதற்கு சீசெல்ஸ் நாடு உதவுவதாக வெளியான குற்றச்சாட்டை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நிராகரித்துள்ளார்.
சீசெல்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன் போல் அடம் இதனை முற்றாக மறுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய சபையில் எதிர்க்கட்சி தலைவர் டேவிட் பியர் தொடுத்த கேள்வி ஒன்றுக்கு இன்று பதிலளிக்கும் போதே அடம் இந்த மறுப்பை வெளியிட்டார்.
இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, அண்மையில் சுமத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் அபிவிருத்திகளுக்கான நிதிகள் சீசெல்ஸின் ஊடாக சுவிஸ் வங்கிகளில் வைப்புச் செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.
சுவிஸில் உள்ள சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளமை காரணமாகவே சீசெல்ஸை சில இலங்கையர்கள் பயன்படுத்துவதாக ஹர்சா தெரிவித்திருந்தார்.
சீசெல்ஸில் 90 ஆயிரம் மக்களே உள்ளனர். எனினும் அவர்களின் வைப்புக்களாக 3000 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் சுவிஸ் வங்கிகளில் கடந்த வருடம் வைப்பு செய்யப்பட்டன.
இந்த உயர்வுக்கு இலங்கையர்களின் பணம் சீசெல்ஸ் ஊடாக வைப்பு செய்யப்பட்டமையே காரணம் என்று ஹர்சா சுட்டிக்காட்டியிருந்தார்.
எனினும் இந்தக்குற்றச்சாட்டு பிழையான எடுகோளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதாக சீசெல்ஸ் வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை உட்பட்ட பல நாடுகளின் நிறுவனங்கள் சீசெல்ஸில் பதிவு செய்ய வாய்ப்புள்ளது. எனவே அந்த நிறுவனங்களின் வைப்புக்கள் சுவிஸ் வங்கிகளில் இருக்கலாம்.
இது சட்டத்துக்கு புறம்பான செயல் அல்ல என்றும் அடம் குறிப்பிட்டார்.
1996 முதல் சீசெல்ஸின் சர்வதேச நிதிச்சேவை தொழில்துறையில் தற்போது 140, 000 சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ad

ad