புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014

காணாமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக் ஆக மாறவேண்டும் -மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர்
காணாமல் போனவர்களை மீட்கும் புனிதப் போரில் நாம் ஒவ்வொருவரும் ரவுல் வொலன்பெக் ஆக மாறவேண்டும் என மனித உரிமை ஆர்வலரும் எழுத்தாளருமான சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் காணாமல் போன பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் அவர்களின் இருப்புப் பற்றி சிறு தகவலாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் இரவையும் பகலாக்கி விழித்திருக்கும் காணாமல் போன குடும்ப உறவுகளின் துன்ப துயரங்களில் நாம் அனைவரும் பங்கெடுக்கவேண்டும் என்ற மனித தர்மச்சிந்தனையை ஒவ்வொரு மனிதர்களும் தமக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
என்ற வாய்ப்பை இத்தினம் நமக்கு அளிக்கின்றது காணாமல் போனவர்களை மீட்டு அவர்களின் குடும்பங்களுடன் இணைக்கவேண்டும் காணாமல் போனவர்களை வேட்டையாடியவர்களை நீதிக்கு முன் நிறுத்தவேண்டும்.
எதிர் காலத்தில் காணாமல் போவது முற்றாக தடுக்கப்படவேண்டும் காணமல் போன குடும்பங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யவேண்டும் போன்ற பண்முக இலக்குகளை முன்வைத்தே இத்தினம் கொண்டாடப்படுகிறது.
உலகலாவிய ரீதியில் மொத்தமாக எத்தனை பேர் காணாமல் போயிருக்கின்றார்கள் என்று எவருக்கும் திட்டவட்டமாகத் தெரியாது ஆனால் இந்த எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருக்கும் என்று மனித உரிமைக்காக குரல் கொடுக்கும் மையங்கள் எதிர்வு கூறுகின்றன காணாமல் போனோர் பிரச்சனை இன்று உலகலாவிய ரீதியில் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
சர்வதேசரீதியாக அனைத்துலக காணாமல் போனோர் தினம் ஆவணி 30ம் திகதி உலகமெங்கும் நினைவு கூரப்படுகிறது. காணாமல் போனோர் பிரச்சினை தேசங்கள் கடந்து உலகலாவிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுத்ததன் விளைவாகவே காணாமல் போனோர் பிரச்சனையை அனைவரினதும் கவனத்தை ஈர்த்தது.
காணாமல் போனோரை மீட்கும் புனிதப் போரில் உலக மக்களால் இன்று வரை போற்றப்படும் மாமனிதனாக சுவிடன் நாட்டைச் சேர்ந்த ரவுல் வாலன் பெக் (Raoul wallenberg)இருக்கின்றார்.
இவர் தனது வாழ்நாள் முழுவதையும் காணமல் போனவர்களை மீட்பதற்காகவே அர்ப்பணித்தார் 20ம் நூற்றாண்டில் மிகச்சிறந்த மனிதாபிமானி என்று இன்றுவரை உலகம் கொண்டாடுகின்றது காணமல் போனோரை மீட்கும் புனிதப் பயணத்தில் இவர் சந்தித்த ஆபத்துக்களையும் அச்சுறுத்தல்களையும் வார்த்தைகளால் விபரிக்க முடியாது இவர் தனது வாழ்நாளில் காணாமல் போன ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோரை மீட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
உலக வரலாற்றிலேயே தனி ஒரு மனிதனாக காணாமல் போன பல்லாயிரக் கணக்கானவர்களை மீட்டு வரலாற்றை தனதாக்கிக் கொண்டதோடு 20ஆம் நூற்றாண்டின் தலை சிறந்த மனிதாபிமானியாக வாழ்ந்த இந்த மனிதக் கடவுளை முன் உதாரணமாகக் கொண்டு காணமல் போன நம் உறவுகளை மீட்கும் ஐனநாயகப் பணியில் நாம் ஒவ்வொருவரும் முழு அர்ப்பணிப்புடன் பங்கெடுக்க வேண்டும்.
இலங்கைத் தீவில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் கானாமல்போனோர் பிரச்சினை தீர்க்கப்படாததோடு கானாமல்போகும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது காணாமல் போனோரை மீட்பதிலும் அவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதிலும் அரசாங்கம் தொடர்ந்து அசமந்தப் போக்கையே காட்டிவருகிறது.
காணாமல் போனோர் தொடர்பில் ஐனாதிபதியினால் நியமிக்கப்பட் ஆணைக் குழு முன் மக்கள் நம்பிக்கையற்ற நிலையிலும் துணிச்சலுடன் தமது சாட்சியங்களை கண்ணீர்மல்க பதிவு செய்த பின்னரும் காணாமல் போனவர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதில் அரசாங்கம் தொடர்ந்து விலகல் போக்கை காட்டி வருகின்றது.
அரசாங்கத்தின் இச் செயற்பாட்டை உலகின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் 30ம் திகதி வருகின்ற அனைத்துல காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு காணாமல் போன குடும்ப அங்கத்தவர்களை ஒருங்கிணைத்து சழூக அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்ற நீதிக்கான சாத்வீக ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் அனைவரும் கலந்து கொண்டு தமது மனித நேயத்தை வெளிப்படுத்த முன்வரவேண்டும் வேண்டும் என சன்மாஸ்டர் தெரிவித்தார்.

ad

ad