புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகள்- வடமாகாண சபை உறுப்பினர் விந்தனுடன் சந்திப்பு
யாழ்.தீவக பகுதியின் சமகால நிகழ்வுகள் குறித்து வடக்கு மாகாண சபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினத்துக்கும் பிரித்தானிய வாழ் தீவக பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 13ம் திகதி சிரேஸ்ட ஊடகவியலாளர் சுப்ரமணியம் மகாலிங்கசிவத்தின் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான தீவகப் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு பிரதிநிதியான விந்தனுடன் தீவக புலம் பெயர் வாழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் தீவக ஒன்றிய முக்கியஸ்தர்களுக்கும் இடையில் தீவக அபிவிருத்தி, குடிநீர், கல்வி விளையாட்டு, மீன்பிடி, விவசாயம், போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் அங்கு மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவது தொடர்பாகவும், தீவக பகுதிகளில் வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நெடுந்தீவைச் சேர்ந்த வர்த்தகரான செல்வரட்ணம் சுரேஸ் மேற்கொண்டிருந்தார்.

ad

ad