புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து புனே- யுனைடட் ஆட்டம் சமநிலை
புனே சிட்டி ,யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இந்தியன் சுப்பர் லீக் காற்பந்து போட்டியில் (ஐ.எஸ்.எல்.) இந்தியாவின் கவுகாத்தியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 32 ஆவது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. (கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் கவுகாத்தி அணியினரிடம் வலம் வந்தாலும் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

இரு அணிகளும் கோல் அடிக்கும் நல்ல வாய்ப்புகளை நழுவ விட்டனர். முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்தது.

இந்த தொடரில் சம நிலையில் முடிந்த 13 ஆவது ஆட்டம் இதுவாகும். அத்துடன் கோல் இன்றி சமநிலை ஆன 7 ஆவது ஆட்டம் இது.

தனது 8 ஆவது லீக்கில் ஆடிய கொல்கத்தா 2 வெற்றி, 4 சமநிலை, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5 ஆவது இடத்தில் உள்ளது.

8 ஆவது ஆட்டத்தில் ஆடிய எப்.சி.புனே சிட்டி அணி 3 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தில் இருக்கிறது.    
 

ad

ad