புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 நவ., 2014

வன்முறையை வன்முறையால்தான் சந்திப்போம்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி!
சென்னையில் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எங்களை விட்டு பிரிந்து சென்றவர்களை பற்றி கவலையில்லை. அவர்களின் பாதையை தேர்ந்தெடுத்துக்கெண்டு செல்கிறார்கள். முடிவு என்னவானாலும் அதைப்பற்றி கவலையில்லை.

ஆனால், செல்கின்றபோது வன்முறைகளில் ஈடுபடுவது என்பது சரியான விசயம் அல்ல. வாசன்  அவர்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறார், நாங்கள் வன்முறையில் நம்பிக்கையில்லாதவர்கள் என்று. அப்படியிருக்கும்போது எங்களுடைய கட்சியின் மூத்த தலைவர் சக்கரபாணி ரெட்டியாரின் வாகனத்தை நேற்று தாக்கியிருக்கிறார்கள் வெளியே போனவர்களில் சிலர். அதுபோன்ற சங்கதிகள் இனிமேல் நடைபெறாமல் வாசன் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். 

வன்முறை மீண்டும் தொடருமேயானால், எங்களைப் பொருத்தவரை வன்முறையை வன்முறையால்தான் சந்திப்போமே தவிர, வேறு வழியில்லை. ஆக இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் வெளியே சென்றவர்கள் ஈடுபடக் கூடாது. ஈடுபட்டால் எங்களைப் பொருத்தவரையில் நாங்களும் அதில் ஈடுபட வேண்டிய தேவை ஏற்படும் என்பதை உணர்ந்து, வெளியே சென்றவர்கள் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார். 

ad

ad