புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2014

பிரதி அமைச்சர் ஒருவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 
ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
 
 
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடைக்கு தீ வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் நிஷாந்த முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்தநிலையில் பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன, இன்றைய தினம் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு  உத்தரவிட்டுள்ளார்.
-

ad

ad