தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அதிகளவிலான சுயாட்சியை வழங்குவதற்கு
தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி சனல் என்.டி.டிவிக்கு அளித்திருக்கும் விஷேட பேட்டியிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டார். ராஜபக்ஷ காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாங்கள் மறுஆய்வு செய்ய உள்ளோம். விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது இழைத்த குற்றங்களுக்காக ஐ.நா.நடத்தும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும். இதுவரை மகிந்த ராஜபக்ஷ அதற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துவந்தார். இனிமேல் அது நடக்காது. கொள்கைரீதியாக தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளது எனவும் ரணில் தெரிவித்தார்.
தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி சனல் என்.டி.டிவிக்கு அளித்திருக்கும் விஷேட பேட்டியிலேயே ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை. மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டார். ராஜபக்ஷ காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாங்கள் மறுஆய்வு செய்ய உள்ளோம். விடுதலை புலிகளுக்கு எதிராக நடந்த போரின்போது இழைத்த குற்றங்களுக்காக ஐ.நா.நடத்தும் விசாரணைக்கு இலங்கை முழு ஒத்துழைப்பை அளிக்கும். இதுவரை மகிந்த ராஜபக்ஷ அதற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் இருந்துவந்தார். இனிமேல் அது நடக்காது. கொள்கைரீதியாக தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு தயாராக உள்ளது எனவும் ரணில் தெரிவித்தார்.