புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மார்., 2015

வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்


வடக்கு மாகாணசபையில் உள்ள அமைச்சுச் செயலாளர்களுக்கு அதிரடி இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாளை ஏப்ரல் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
வடமாகாண கல்வி அமைச்சுச் செயலாளருக்கும், சுகாதார அமைச்சுச் செயலாளருக்கும், மீன்பிடி அமைச்சுச் செயலாளருக்கும் மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மீன்பிடி அமைச்சுச் செயலாளராக இருந்த வரதீஸ்வரன் முதலமைச்சரின் செயலாளராகவும்,
கல்வி அமைச்சுச் செயலாளராக இருந்த சத்தியசீலன் மீன்பிடி அமைச்சு செயலாளராகவும்,
சுகாதார அமைச்சுச் செயலாளராக இருந்த ரவீந்திரன் கல்வி அமைச்சு செயலாளராகவும்,
சுகாதார அமைச்சுச் செயலாளராக திருவாகரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் ஏன் நடைபெற்றன என்ற விடயங்கள் தொடர்பாக பலரும் பலவாறு பேசிக்கொள்கின்றனர்.
இவை முன்னமே தீர்மானிக்கப்பட்டைவை என்றும், முன்னைய அரசசார்புச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளார்கள் என்றும், குறித்த துறைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளால் இந்த மாற்றங்கள் நடைபெற்றுள்ளன என்றும், பலவாறு பேசப்படுகின்றது.
தனியே செயலாளர்களை மாற்றி மாற்றங்களைக் கொண்டுவர முடியுமா? என்ற கேள்வியும் இங்கே வினவப்படுகின்றது.

ad

ad