புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜூன், 2015

கிளி.மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பில் சம்பந்தன் குழுவினர் அமைச்சர் சுவாமிநாதனுடன் விசேட பேச்சுவார்த்தை

கிளி. மாவட்டத்தில் இராணுவத்தால் விடுவிக்கப்படாத மக்களின் காணிகள் மீள்குடியேற்றம் தொடர்பாக இன்று கொழும்பில் த.தே. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான பா. உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சருடன் இந்த சந்திப்பில் வடக்கு மாகாணத்துக்கான பிரதமரின் இணைப்பாளர் மாலியத்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பிரட்மன் வீரக்கோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் சம்மந்தன் தலைமையில் பா.உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா செல்வம் அடைக்கலநாதன் இரா.செல்வராசா சீ.யோகேஸ்வரன் எம்.ஏ.சுமந்திரன் எஸ்.சிறீதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தாலும் கடற்படையாலும் ஆக்கிரமிக்கப்படுள்ள மீள்குடியேற்றம் செய்யவேண்டிய பரவிப்பாஞ்சான் மருதநகர் முகமாலை இரணைதீவு கிராமங்களை இராணுவத்திடமிருந்து விடுவித்து காணி உரிமையாளர்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாகவும் முகமாலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்ற கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் தொடர்பாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் உழவனூர் தம்பிராசபுரம் நாதன் திட்டம் புன்னை நீராவி போன்ற காணி அனுமதிப்பத்திரம் இல்;லாத மத்திய வகுப்பு திட்டக்காணி உரிமையாளர்களுக்கு  தற்காலிக காணி அனுமதிப்பத்திரத்தை வழங்கி அவர்களுக்கு வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுப்பதற்கு வழிவகை எட்டப்படுவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்படி விடயங்கள் தொடர்பாக விசேட கூட்டமொன்று மீள்குடியேற்ற அமைச்சர் தலைமையில் எதிர்வரும் 1ம் திகதி 1.00 மணிக்கு கிளிநொச்சி கச்சேரியில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பா.உறுப்பினர் சி.சிறீதரனை தொடர்பு கொண்டபொழுது தெரிவித்துள்ளார்.
இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம் வலிகாமம் மன்னார் குஞ்சுக்குளம் திருகோணமலையின் சம்பூர் முல்லைத்தீவின் கேப்பாப்பிலவு கிராமங்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டுள்ளது.

ad

ad