நடிகர் திலகம் சிவாஜி மணிமண்டபம் அமைக்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னையில் 21-ம் தேதி உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் சந்திரசேகரன்
தமிழத் திரையின் அடையாளமாக, கலைப் பொக்கிஷமாக தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, தமிழ் சினிமாவுக்கு உயிர்கொடுத்து,உலக அரங்கில் தமிழினைத் தலைநிமிரச் செய்த அவருக்கு சென்னையில் மணிமண்டபத்திற்காக இடம் ஒதுக்கப்பட்டதோடு சரி மணிமண்டபம் இதுவரை அமைக்கப்படாமலிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
நடிகர்திலகம் சிவாஜி அவர்களுக்கு சென்னையில், தமிழக அரசு ஒதுக்கிய இடத்தில், தமிழக அரசின் சார்பிலேயே மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி 21-ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாகவும். இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறதாகவும், அவர் கூறியுள்ளார்.