தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நடிகர் விஷால் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இதுதொடர்பாக நேற்று திருச்சி தேவர் ஹாலில் நாடக நடிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நடிகர் ஜெரால்டு மில்டன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்து கொண்டு விஷால், ‘’நடிகர் சங்க தேர்தலில் பதவி நாற்காலியை பிடிக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் ஊர் ஊராக செல்லவில்லை. சினிமா எனது குடும்பம். அதில் நாடக கலைஞர்களும் அங்கம். அவர்களின் நலனுக்காக குரல் கொடுத்தால் அது தவறா?
நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நடந்துள்ளன. நடிகர் சங்கம் பற்றி விஷால் மட்டுமல்ல எல்லா நடிகர்களும் இனி கேள்வி கேட்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த் உள்பட அனைவரும் வரிசையில் நின்று ஓட்டு போட வேண்டும். மனசாட்சிப்படி ஓட்டு போடுங்கள், நிச்சயம் ஒரு மாற்றம் வந்தாக வேண்டும்’’என்று பேசினார்.
பின்னர் நடிகர் விஷால் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை மாற்றம் செய்ய முடியாது. நடிகர் சங்க தேர்தலில் மூத்த சினிமா கலைஞர் என்ற அடிப்படையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்பட அனைத்து முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து வாக்களிக்கும்படி கேட்போம்.
கமலஹாசன் பற்றி ராதாரவி தவறாக பேசியிருக்கிறார். அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன். கமலஹாசன் எங்கள் அணிக்கு ஆதரவு தரவே