புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜன., 2016

அரச குடும்பத்து உறுப்பினரின் டுபாய் வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கையைச் சேர்ந்த மூன்று பேர்,டுபாயில் உள்ள வங்கி ஒன்றில் 3 ஆயிரத்து 393 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்புச் செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் ஒருவர் அரச குடும்பத்து உறுப்பினர் எனவும் அவரது வங்கிக் கணக்கில் 1, 089 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அரச குடும்பத்துக்கு நெருக்கமான வர்த்தகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவரது வங்கிக் கணக்கில் 504 மில்லியன் அமெரிக்க வைப்புச் செய்யப்பட்டுள்ளது.கடந்த அரசாங்கத்தின் முன்னாள் செயலாளர் மற்றும் நிறுவனம் ஒன்றின் தலைவராக இருந்த ஒருவரும் இணைந்து வைத்துள்ள கூட்டு வங்கிக் கணக்கில் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்த நபர்களின் டுபாய் வங்கிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. சிங்கப்பூர் வங்கிக் கணக்குகள் சம்பந்தமாக தகவல் கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

இந்த வங்கிக் கணக்குகள் பற்றிய அனைத்து தகவல்களும் கிடைத்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ad

ad