புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2016

புதிய அரசியல் கட்சி அமைக்கும் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்


பதிய அரசியல் கட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கட்சியின் உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பதற்கு நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ பங்களிப்பும் வழங்கும் உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சிலர் புதிய கட்சி அமைப்பது குறித்து கருத்து வெளியிட்டிருந்தனர்
எவ்வாறெனினும் புதிதாக கட்சி அமைத்து போட்டியிட்டால் தோல்வியடைய நேரிடும் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கருதுவதாகத் கட்சியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ad

ad