புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜன., 2016

ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ஜெகன் உயிர்நீத்த பாடசாலை மாணவன் வீட்டுக்குச் சென்றார்


ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனிகன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உயிர்நீத்த பாடசாலை மாணவன் செந்தூரனின் வீட்டுக்கு சென்று பெற்றோருடன் அளவளாவியுள்ளார்.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு  10 வருடங்கள் சிறை தண்டணை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தின் 1வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்று ஜனாதிபதியினால் இவர் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணம் வந்த ஜெனீகன் கோப்பாய் பகுதியில் உள்ள செந்தூரனின் வீட்டுக்கு சென்று செந்தூரனின் பெற்றோருடன் கலந்துரையாடினார்.
பின்னர் செந்தூரனின் 45ம் நாள் நினைவு தினம் இன்று நடைபெறும் நிலையில் செந்தூரனின் உருவப்படத்திற்கு அஞ்சலிகளையும் செலுத்தினார்.
இதன் பின்னதாகவே யாழ்.அச்சுவேலி பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்லவுள்ளார்.
உயிர் தியாகம் செய்து பெற்றுக் கொடுக்கும் விடுதலை குற்ற உணர்வுடன் வாழ வைக்கும்
உயிர்களை தியாகம் செய்து சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பெற்றுக் கொடுக்கும் விடுதலை அவர்களை விடுதலைக்கு பின்னரும் குற்ற உணர்வுடன் வாழ வைக்கும் என ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்ட சிவராசா ஜெனீகன் தெரிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு இன்று யாழ்.வந்த ஜெனீகன் அரசியல் கைதிகள் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த செந்தூரனின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
விடயம் தொடர்பில் மேலும் அவர் கூறுகையில், ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். என்னோடு பல அரசியல் கைதிகள் சிறை வாழ்க்கை அனுபவிக்கின்றனர்.
இந்நிலையில் எமது விடுதலையை வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த மானவனின் குடும்பதை நேரில் சந்திபதற்கு வந்துள்ளேன் இது எனது தனிபட்ட முடிவல்ல ஒட்டுமொத்த தமிழ் அரசியல் கைதிகளின் விருப்பம் நான் விடுதலையாகும் போது கட்டாயம் செந்தூரனின் வீட்டிற்கு செல்லவேண்டும் என்பதே.
அதனை என்னிடம் கூறினார்கள். இவ்வாறான உயிர்த் தியாகங்களின் ஊடான சிறைமீட்பு சரியானதல்ல. இதனால் நாம் விடுதலையாகியும் குற்ற உணர்ச்சியிலேயே எமது வாழ்வை தரும் என்றார்.

ad

ad