புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2016

காங்கிரசுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு: திமுக அறிவிப்பு



திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் கடந்த வாரம் குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்காக நேற்று இரவு குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்தனர். அவர்கள் இன்று காலை கலைஞர் மற்றும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்குவதாக முடிவு செய்யப்பட்டு, தொகுதி உடன்பாடு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத்தொடர்ந்து எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிடுவது குறித்து இரு கட்சிக் குழுவினரும் முடிவு செய்வார்கள். 

ad

ad