புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஏப்., 2016

லைஞர்,ஜெயலலிதா வேட்புமனு தாக்கல் செய்தனர்




சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று 12.25 மணிக்கு தண்டையார்பேட்டை மணடல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பத்மஜா தேவியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

சசிகலா உடன் வந்து சென்றார்.


சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கலைஞர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  இதையடுத்து அத்தொகுதியில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.  இந்நிலையில் இன்று 14.45 மணியளவில் திருவாரூர் தொகுதியில் கலைஞர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

உதவி ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர் காட்டூரில் இருக்கும் தனது தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பென்னாகரம் தொகுதியில் 
அன்புமணி வேட்பு மனுத்தாக்கல்


தருமபுரி மாவட்டம் பென்னகரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று (25.04.2016) வேட்பு மனுத் தாக்கல் செய்தார். 

பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஆர். மல்லிகாவிடம் இன்று மதியம் 12.05 மணிக்கு மனுவை சமர்ப்பித்தார்.

 பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாசுடன் பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் பாடி செல்வம், மாவட்ட அமைப்புச் செயலாளர் வெங்கடேஸ்வரன்,  ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் பி.வி. மாது ஆகியோர் உடனிருந்தனர்.

ad

ad