புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜூன், 2016

கண்டிப்பு...எச்சரிக்கை...கண்ணீர்... அதிமுக செயற்குழுவில் கொந்தளித்த ஜெயலலிதா!

செயற்குழுவில் நடந்த அதிரடி உணர்ச்சிமிகு காட்சிகள் என்ன என்பதை அதிமுக தலைமைக்
கழக வட்டாரத்தில் விசாரித்தோம் . ' அம்மா இந்தமுறை செயற்குழு கூட்டத்தில் இப்படி அதிரடியாக பேசுவார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். வெளியில் கட்சியினர் வழங்கிய வரவேற்பை சிரித்த முகத்தோடு  ஏற்றுக்கொண்டு உள்ளே வந்த அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிரமுகர்கள், அமைச்சர்கள் நடத்திய உள்ளடி வேலைகளை ரகரகமாகப் பிரித்துக் கொட்டினார். யார் முகத்திலும் ஈயாடவில்லை.

முக்கியமாக முன்னாள் அமைச்சர் இருவரையும், இன்னாள் அமைச்சர் ஒருவரையும், தூத்துக்குடி மேயரையும் பிடிபிடியென பிடித்து கண்டிப்பின் உச்சத்துக்கே சென்றுள்ளார்'. "இதுவரை அதிமுகவில் தேர்தலில் உள்ளடி வேலை நடந்ததில்லை. ஆனால் இந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் உள்ளடி வேலைகள் செய்து, நாம் ஜெயிக்கவிட்டாலும் பரவாயில்லை அடுத்தவர் ஜெயிக்கக் கூடாது என்று செயல்பட்டு உள்ளீர்கள்.
உறுத்தலை ஏற்படுத்தவில்லையா? இந்த அளவுக்கு எதிர்க்கட்சிகள்  இடம் பிடித்தது உங்களின் உள்ளடி  வேலைகளால்தான். என்னால் துரோகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. " என்று காட்டமாக பேசினார் என்றனர் தலைமைக் கழக வட்டாரத்தினர். 

பின்னர் தனது உடல்நலம் குறித்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,பெரும்பான்மையான செயற்குழு உறுப்பினர்கள் கண்களில் கண்ணீர் கொட்டியது என்று உருக்கமாக தெரிவித்தனர் அதிமுக-வினர்

அதிமுக இன்னும் சில மாதங்கள் கழித்து நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்போடு தயாராகிவிட்டது.

ad

ad