புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2016

ஸ்ரீ.சு.கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக காதர் மஸ்தான் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினரும்
மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நியமனம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது
வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியானது வவுனியா,மன்னார்,முல்லைத்தீவு, ஆகிய மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்து காணப்படுவதால் தமிழ் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்தான் எம்பியும், சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர் தர்மபாலாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒரேயொரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ad

ad