புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2016

இனியபாரதியின் முன்னாள் சாரதி உட்படதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்கட்சியின் மூன்று உறுப்பினர்கள் கைது

னியபாரதியின் முன்னாள் சாரதி உட்பட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மூவரை திருக்கோவில்
பிரதேசத்தில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.

இத்தகவலை திருக்கோவில் பொலிஸார் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள், தமது உறவுகள் காணாமல் போனமை தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னாள் சாட்சியமளித்ததுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்திருந்தனர்.

இது தொடர்பாக விசாரணை செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கட்டளை வழங்கியது. இதனையடுத்து முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்களான திருக்கோவில் தம்பிலுவில் முனையக்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த மனோகரன், தம்பிலுவில் வீ.சி. வீதியைச் சேர்ந்த க.கமலநாதன் (மதி) மற்றும் இனியபாரதியின் முன்னாள் வாகன சாரதியான தம்பிலுவில் ஆர்.டி.ஏ. வீதியைச் சேர்ந்த ஆ.யுவராஜ் ஆகியோரை இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த ஹரன், யூட் ஆகிய இருவரை விசாரணைக்காக அம்பாறை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad