புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2016

ஐ.நா பொதுச்செயலர் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள நிலை யில் யாழ்.செயலகத்திற்கு முன்பாகவும் யாழ். பொதுநூல க த்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. காணாமற் போனோரின் உறவின ர்கள்,வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளோர் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காணாமற் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியும் வலிவடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள மயிலிட்டி உட்பட்ட காணிகளில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவேண்டுமெனத் தெரிவித்துமே இந்த ஆர்ப்பா ட்டங்கள் இடம்பெறுகின்றன.

இலங்கையில் போர் காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான விசாரணை
என்பது மக்களால் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ள கூடியதாக இருக்கவேண்டும். அவ்வாறான விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கவே தாம் முயற்சித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

நேற்றைய தினம் யாழ். குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூன் நண்பகல் 1.30 மணியளவில் யாழ். பொது நூலகத்தில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

மேலும் முதலமைச்சர் இவ்விடயம் தொடர்பாக தெரிவிக்கையில், நாங்கள் பேசும் போது 2009ஆம் ஆண்டு தாங்கள் வருகை தந்தபோது மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் பேசப்பட்டிருந்த போதும். போர்க் குற்ற விசாரணைக்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதற்கு அவர் பதிலளிக்கையில், போர்க்குற்ற விசாரணை என்பது மக்களால் அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக் கொள்ள கூடியதாக இருக்கவேண்டும். அப்போதே மக்களுக்கு நம்பிக்கை உண்டாகும். எனவே அவ்வாறான ஒரு விசாரணை பொறிமுறையினை உருவாக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது. அந்த பொறிமுறை உருவாக்கப்பட்டதன் பின்னர் அதனை சரியாக நடைமுறைப்படுத்துவதற்கான உதவிகளை ஐ.நா நிச்சயமாக வழங்கும் என்றார்.

இதேபோல் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாக நாங்கள் சுட்டிக்காட்டியபோது 2009ஆம் ஆண்டு தாம் இலங்கை வந்தபோது அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டதாகவும், இதுவரை காலமும் அந்த சட்டம் நீக்கப்படாமலிருப்பதானது பிழை எனவும் அதனை நீக்கவேண்டும் எனவும் தாம் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை கேட்டுள்ளதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் தாம் கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதேபோல் நல்லிணக்கத்திற்காக பெருமளவு பணம் செலவிட உள்ளதாகவும் அதற்கு பல நாடுகள் நிதி வழங்க உள்ளதாகவும் அறிகிறோம். ஆனால் சிறைகளில் உள்ளவர்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை. காணாமல்போனவர்கள் விடயத்தில் உண்மைகள் கண்டறியப்படவில்லை. பெருமளவு படையினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் கிடக்கவில்லை. இவ்வாறான நிலையில் எப்படி நல்லிணக்கம் உண்டாக்க போகிறீர்கள்? என தாம் கேள்வி எழுப்பியதாக முதலமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

ad

ad