புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2016

காவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோகாவலரணில் நிற்காமல் சென்றால் பொலிஸார் ஏன் சுடவேண்டும்? 1000சீசீ மோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோட்.சைக்கிள் பொலிஸாருக்கு எதற்கு?கேட்கிறார் அமைச்சர் மனோ

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் பொலிஸ் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு கொட்டாஞ்சேனையில் இன்று இடம்பெற்ற “அரசசேவை உங்களுக்காக” என்ற நடமாடும் சேவையில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
பொலிஸ் காவலரணில் நிறுத்தாமல் செல்வோரை துரத்திப் பிடிப்பதற்கே பொலிஸாருக்கு அதி நவீன ஆயிரம் சீசீ மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
காவலரணில் நிறுத்தாமல் வேகமாக போனவர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துகொண்டு போனதாக தகவல் இல்லை. இந்தநிலையில் ஏன் சுட வேண்டும் என தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஆகவே அவர்களை துரத்தி சென்று வழிமறித்து பிடிக்க வேண்டும். அப்படியே சுட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் முதலில் ஆகாயத்தை நோக்கியும், பின்னர் முழங்காலுக்கு கீழேயும் சுட வேண்டும் என்ற விதிகள் மூன்றாம் வகுப்பு குழந்தைக்கும் தெரியும் எனவும் இவை பயிற்சி பெற்ற இந்த பொலிஸாருக்கு தெரியவில்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் மலையகத்தில் புஸ்ஸல்லாவையில் ஒரு இளைஞர் பொலிஸ் காவலில் இருந்தபோது மரணமடைந்தார். இப்போது யாழ்ப்பாணத்தில் இந்த இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
 
நேற்று முதல் நாள் வரை இந்த நாட்டிற்கு விஜயம் செய்திருந்த ஐ.நா சபையின் சிறுபான்மை விவகார அறிக்கையாளர் ரீட்டா ஐஷக் இங்கே இருக்கும் போதே இந்த சம்பவம் நிகழ்ந்திருந்தால் இன்னமும் நிலைமை கேவலமாக இருந்து இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
 
தங்களுக்கு இராணுவம் வேண்டாம். சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் சிவில் பொலிஸ் எங்கள் நண்பர்கள் என்று இன்று சொல்ல ஆரம்பித்திருக்கும் மக்கள்  யாழ்ப்பாணத்து மக்களை மீண்டும் பொலிஸ் மீது அவநம்பிக்கை கொள்ள வைக்கும் சம்பவங்களாக இவை காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
 
பொலிஸ்துறை தொடர்பில் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்த, குற்றம் செய்தோர் மீது கடும் நடவடிக்கைகளை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு எடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad