புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2017

அதிர்ச்சி வைத்தியம் தந்த சென்னைவாசிகள்! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டம்!

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்!  எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் வரவேற்பை மட்டுமே பார்த்தவர்களுக்கு, இது கூடுதலான அதிர்ச்சி வைத்தியம்தான்! அப்படி என்ன நடந்து விட்டது?  

கூவத்தூரிலிருந்து பதவியேற்பு விழாவுக்கு காரில் கிளம்பினார்கள் சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள். அவர்களை வழிநெடுகிலும் காறி துப்பினார்கள் பொது மக்கள். சென்னை பாஷையில் திட்டித் தீர்த்தார்கள். எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தாரையும் வசை பாடினார்கள். டிராபிக்கில் மாட்டிக் கொண்ட அதிமுக கொடி கட்டிய. கார் ஒன்றில் முன் சீட்டில் ஒரு எம்.எல்.ஏ.   உட்கார்ந்திருந்தார். பேண்ட், ஷர்ட் அணிந்த ஒருவர், எம்.எல்.ஏ. முகத்துக்கு நேராகவே, கார் கண்ணாடியில் காறி துப்பினார். இந்த அவமானத்தை சகித்துக்கொள்ள முடியாமல், சில எம்.எல்.ஏ.க்கள் காரிலிருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார்கள்.  இந்த மக்களைப் பார்த்தால் ‘ஏற்பாடு’ செய்தவர்களைப் போல தெரியவில்லை. தங்களுடைய ஆத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வாட்ஸப்பில் வீடியோவையும் பரவ விட்டிருக்கிறார்கள். 

கூவத்தூர் ரிசார்டில் எத்தனை நாட்கள்? எத்தனை ஆட்டம்? குடித்து விட்டு குத்தாட்டம்? கோடிகளில் பணம் வேறு. வாக்களித்த மக்களையோ, தொகுதியையோ துளியும் சிந்திக்காத எம்.எல்.ஏ.க்கள் அல்லவா? இவர்களின் அரசியலை எப்படி ஏற்பார்கள் மக்கள்? அதனால்தான், தங்களது ஆதங்கத்தை இத்தனை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.  சென்னையிலேயே அதிரடியாக இத்தனை வரவேற்பு! அடுத்து, தொகுதிக்குச் செல்லும் போது, சொந்த ஊர் மக்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? என்னும் பயம் இப்போதே அதிமுக எம்.எல்.ஏ.க்ளை கவ்வியிருக்கிறது. 

உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆக வேண்டும்!

ad

ad