புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 பிப்., 2017

நடிகை பாவனாவை பலாத்காரம் செய்த கும்பல்! படம் பிடித்த வக்கிரம்!


‘நன்கறிந்த நடிகைதானே! அவரைப் பற்றி நமக்குத் தெரியாதா? அத்துமீறினால் என்ன செய்து விடுவார்?’ இப்படி ஒரு வக்கிரத்தோடு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டிருக்கிறார்கள் நடிகை பாவனாவின் கார் டிரைவர்கள். இன்னொரு கூட்டாளியையும் சேர்த்துக் கொண்டு, இந்த டிரைவர்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கின்றனர். 

நடிகை பாவனா இவர்களிடம் எப்படி மாட்டிக் கொண்டார்?  



தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருபவர் பாவனா. இவரிடம் மார்ட்டின் என்பவர் முன்பு கார் டிரைவராக வேலை பார்த்திருக்கிறார். சுனில் என்பவர் சினிமா படப்பிடிப்புக்களின் போது, கார் டிரைவர்களை ஏற்பாடு செய்து தருபவர். இவரும் கார் ஓட்டுவார். பாவனாவுக்காக சுனில் அடிக்கடி டிரைவர்கள் ஏற்பாடு செய்து தருவது வழக்கம். இவர், பாவனாவுக்காக அமர்த்திக் கொடுத்த டிரைவர்தான் மார்ட்டின்.

ஷூட்டிங் முடித்துவிட்டு, இரவு 9-30 மணியளவில் காரில் திரும்பிக் கொண்டிருந்தார் நடிகை பாவனா. எர்ணாகுளம் மாவட்டம், அங்கமாலியை நெருங்கிய போது, பாவனாவின் காரை மறித்து ஒரு கும்பல் ஏறிக் கொண்டது.  பாலாரிவட்டம் வரும் வரை, இந்தக் கும்பல் காருக்குள் வைத்து, பாவனாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கிறது. இந்தச் செயலை போட்டோவாகவும், வீடியோவாகவும் வேறு எடுத்திருக்கிறது. மணி 10-30 ஆனபோது, பாவனாவை அங்கமாலியில் விட்டுவிட்டு, வேறொரு காரில் தப்பித்து விட்டது அந்தக் கும்பல். பிறகு, கக்கநாட்டில் உள்ள திரைப்பட இயக்குநர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பாவனா, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்தக் கும்பலில் உள்ளவர்கள் தன்னைத் துன்புறுத்திய கொடுமையைச் சொல்லி அழுதிருக்கிறார். அதன் பின்னரே, காவல்துறைக்கு தகவல் சொல்லியிருக்கிறார் அந்த இயக்குநர். உடனே, போலீசார் நேரில் வந்து பாவனாவிடம் வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, முன்னாள் டிரைவர் மார்ட்டினை போலீசார் கைது செய்திருக்கின்றனர். சுனில் தப்பி விட்டார். 

இது குறித்துப் பேசிய காவல்துறை டி.ஜி.பி. லோக்நாத் பெரா, “அந்த இளம் நடிகை தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட அனைவருமே நடிகைக்குத் தெரிந்தவர்கள்தான்.” என்கிறார்.  

பிரபல நடிகை என்பதால், பப்ளிசிட்டி ஆகிவிடும் என்று பயப்படுவார்; என்ன நடந்தாலும் வெளியில் சொல்ல மாட்டார் என்ற தைரியத்தில்தான், அவரது டிரைவர்களே அவரைக் கொடுமைப்படுத்தி இருக்கின்றனர். 

ad

ad