புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 பிப்., 2018

கஜேந்திரகுமாரும் சுரேசும் பொய்ப்பிரச்சாரம்! - துரைராஜசிங்கம்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது போன்ற பொய்யான கருத்துக்களை கஜேந்திரகுமாரும்,
சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுவது போன்ற பொய்யான கருத்துக்களை கஜேந்திரகுமாரும், சுரேஸ் பிரேமச்சந்திரனும் தெரிவித்து வருவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் மாவட்ட தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான விடயங்களில் ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவை ஈடுபடச் செய்து அது தொடர்பான தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னேற்றம் கண்டுகொண்டிருக்கும் முயற்சியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஈடுபட்டுக் கொண்டு வருகின்றது.

சுரேஸ் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்வது போன்ற வெவ்வேறான கருத்துக்களையும், பொய்மைகளையும் கூறி வருகின்றனர். உண்மையில் இந்த தீர்மானம் ஜெனீவாவில் கொண்டு வரப்பட்ட போது இது தமிழர்களுக்குஉதவாது என்று அதனை எரித்த கைங்கரியத்தையும் இவர்களே செய்தார்கள்.ஆனால் அந்த விடயத்தைத் தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் மூலம் இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி பொறுப்புக் கூறுகின்றதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற கடமையிலும், தீர்வு காண்பதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்குகின்ற நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக மிகவும் மந்தமாக என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் தொடர்ச்சியாக கருமமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நோரத்திலே தான் இதனை நாங்கள் வேறு வழிப்படுத்துவதாகக் கூறுகின்றார்கள்.

உண்மையில் எஞ்சியிருக்கின்ற ஓராண்டு காலத்திற்குள் இந்த விடயங்களிலே மிகவும் உறுதியாக இலங்கை அரசு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக எமது தலைவரைச் சந்தித்த எல்லாத் தூதுவர்களிடமும் நாங்கள் வலியுறுத்திக் கூறியிருக்கின்றோம். இதனடிப்படையில் தான் இப்போது ஐநாவின் மனித உரிமை ஆணையகச் செயலாளரின் அறிக்கையை எமது தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு வரவேற்றும் இருக்கின்றது.

உண்மையிலே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகின்ற போது போர்க்குற்றம் உட்பட 34 விடயங்களுக்கு இதிலே தீர்வு எட்டப்பட இருக்கின்றது. இவை அல்லாமல் இந்த விடயத்தை ஐநா பாதுகாப்பு சபைக்கு கொண்டு போகின்ற விடயம் தொடர்பில் கஜேந்திரகுமார் மற்றும் சுரேஸ் ஆகியோர் கூறியிருக்கின்ற கருத்தானது எந்த அளவுக்கு அறிவு பூர்வமானது அல்லது எந்தவிதத்திலே அர்த்தபுஷ்டியானது என்பது தொடர்பிலே மக்களும் சிந்திக்க வேண்டும்.

ஜெனீவா தொடர்பான தீர்மானத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளை முன்னேற்றிக் கொண்டு இந்த ஒரு வருட காலத்திற்குள்ளே இந்த விடயங்களிலே தீர்வுகாண வேண்டும்.குறிப்பாக அரசியலமைப்பு வரைபு தொடர்பில் நாங்கள் அடைவு ஒன்றை அடைந்திட வேண்டும் என்கின்ற வகையில் ஜெனீவாவினுடைய அழுத்தங்களை நாங்கள் பிரயோகிப்பதற்காக இருக்கின்றோம்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினைப்பொறுத்தவரையில் தமிழ் தேசியத்தினை ஏற்றுக்கொள்ளாதவர்களாகவும் வடகிழக்கு இணைப்புக்கு முரணானவர்களாகவும் உள்ளனர். வடகிழக்கு இணைப்பு தொடர்பில் தெளிவான கருத்தினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவிக்க வேண்டும் என எங்களை சந்தித்த கிழக்கு மாகாண தமிழர் ஒன்றியத்திடம் நாங்கள் தெரிவித்திருந்தோம்.

அந்தவிடயம் தொடர்பில் இன்னும் தெளிவான பதிலை எங்களுக்கு தரவில்லை. அதனைவிடுத்து வேறு விடயங்களையே எங்களுக்கு சொல்லிக்கொண்டுள்ளனர். மிகமுக்கியமாக தமிழ் தேசியத்தினை ஏற்றுக்கொள்கின்ற தமிழ் கட்சிகளுடன்தான் எமது பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்

ad

ad