புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 பிப்., 2018

சம்பந்தனின் பேச்சு பிதற்றலே;மகிந்த!

தாமரை மொட்­டி­லி­ருந்து தமி­ழீ­ழம் மல­ரும் என்று கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் பிதற்­று­கி­றார். இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித் தார்.

“தீர்வு முயற்­சி­கள் எனது ஆட்­சிக்­கா­லத்­தில் நடந்­த­போது சம்­பந்­தன் முழு­மை­யாக ஒத்­து­ழைக்­க­வில்லை. அப்போது இந்­தி­யா­வின் பேச்­சைக் கேட்டு நடந்த சம்­பந்­தன், இன்று தாமரை மொட்­டில்­தான் தனித் தமி­ழீ­ழம் மல­ரும் என்று சொல்­வது நகைப்­பாக இருக்­கி­ற­து”-­என்று மகிந்த குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன்­தி­னம் உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் தவ­றான பரப்­பு­ரை­களை மகிந்த அணி முன்­னெ­டுக்­கு­மா­யின் தாமரை மொட்­டி­லி­ருந்தே தனித் தமி­ழீ­ழம் மல­ரும் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச கருத்து வெளி­யிட்­டுள்­ளார்.

“எனது ஆட்­சிக்­கா­லத்­தில் இடம்­பெற்ற தீர்­வுப் பேச்­சு­க­ளுக்கு ஒத்­து­ழைக்­கா­மல் சம்­பந்­தன் இப்­போது பிதற்­று­கின்­றார். அப்­போது புலம்­பெ­யர்ந்­த­வர்­க­ளின் பேச்­சை­யும் இந்­தி­யா­வின் பேச்­சை­யும் கேட்டு சம்­பந்­தன் எங்­க­ளு­டன் ஒத்­து­ழைக்­க­வில்லை.

ஒரு பேச்சு நடக்­கும்­போது பல கருத்­துக்­கள் வர­லாம். பல சிக்­கல்­கள் வர­லாம். ஆனால், ஒத்­து­ழைக்­கா­மல் இருப்­பது நியா­ய­மா­ன­தல்ல. சம்­பந்­தன் அத­னைச் செய்­தார். இப்­போது தாமரை மொட்­டி­லி­ருந்து தனித் தமி­ழீ­ழம் மல­ரும் என்று அவர் சொல்­லு­வது வெறும் பிதற்­றலே.”- என்று அவர் கூறி­யுள்­ளார்

ad

ad