புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2018

மன்னாரில் ஆடைகள் அற்ற நிலையில் சடலங்கள் புதைக்கப்பட்டனவா?


மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகளை கண்டெடுக்கும் அகழ்வு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சடலங்கள் ஆடைகள் அற்ற நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.


இன்று (திங்கட்கிழமை) 62ஆவது நாளாகவும் மன்னாரில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை பேராசிரியர் தலைமையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் இடம்பெறுகின்ற போதும், குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவிலான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணிகளை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இதுவரை வட்ட வடிவிலான உலோகப்பொருட்கள், மாலை போன்ற ஒரு சில தடயப் பொருட்களே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

4 தொடக்கம் 5 அடி வரை அகழ்வுகள் இடம்பெற்றிருந்தாலும் இதுவரை துணிகளோ அல்லது ஆடைகளுடன் சம்பந்தப்பட்ட எந்தவிதமான தடயப்பொருட்களும் கிடைக்கவில்லை என்பது சந்தேகத்திற்குரியதாக காணப்படுகின்றது.

இதுவரை ஆடையுடன் காணப்படும் தடயப்பொருட்கள் எவையும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் ஆடைகள் அற்ற நிலையில் புதைக்கப்பட்டிருக்களாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ad

ad