அந்த இடத்தினை மீட்ப்பதற்காக மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்த போதும் குறித்த பகுதி தொல் பொருள் திணைக்களத்தால் தமது பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழர்களின் முழுமுதல் கடவுளான பிள்ளையார் ஆலயமும் அந்த பகுதியில் அமைந்துள்ளமையினால் இந்து சமய வழிபாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் பிரதேச மக்களால் பொங்கல் பொங்கி தொன்று தொட்டுவந்த மரபு வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
இந்து சமய வழிபாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் பிரதேச மக்கள் பொங்கல் பொங்கி வழிபாட்டினை மேற்கொண்டுள்ளார்கள். இதற்கமைய நேற்று திங்கட் கிழமை பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்