வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளை சர்வதேசத்துக்கு உரத்து சொல்வதில் வெற்றியடைந்த வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள் கட்டுமானம் தொடர்பில் அம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய வினா ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்திருந்தா