புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2018

பிரதமரின் செயலாளராக மீண்டும் ஏக்கநாயக்க நியமனம்

இன்று காலை பிரதமராகப் பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயலாளராக ஈ.எம்.எஸ்.பீ. ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 3​ஆவது தடவையாகவும் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாகப் பிரிவில் ஓய்வுப் பெற்ற அதிகாரியான இவர், குறித்த துறையில் 30 வருடங்கள் அனுபவமிக்கவரும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பாடம் தொட​ர்பில் சிறப்பு பட்டதாரியுமாவார்.

அத்துடன் ஏக்கநாயக்க ஐக்கிய நாடுகள் அமைப்பின் வீட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் பிரதானியாக செயற்பட்டுள்ளதுடன், மலேசியா மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகங்களிலும் கடமையாற்றியுள்ளார்.

ad

ad